உயிர்த்தஞாயிறு தாக்குதல் : அனுர அரசின் சக்திவாய்ந்த அமைச்சரை பதவி விலக வலியுறுத்து
ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகள் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணைகள் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, தற்போதைய பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவை அவரது பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்குமாறு அருட்தந்தை ரோகன் டி சில்வா அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஒரு சிறப்பு அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டபோது அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
தாக்குதல் நடந்தவேளை கிழக்கு மாகாண தளபதி
சமூகம் மற்றும் அமைதிக்கான மையம் ஏற்பாடு செய்திருந்த, ‘நினைவு, வலி மற்றும் நம்பிக்கை: 7 ஆண்டுகளுக்குப் பிறகு நீதியைத் தேடுதல்’ என்ற தலைப்பிலான நிகழ்வில் பேசிய அருட்தந்தை ரோகன் டி சில்வா,தாக்குதல்கள் நடந்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு விசாரணைகள் ஒரு நேர்மறையான திசையில் சென்றுள்ளதாகக் கூறினார்.

இருப்பினும், சர்ச்சைக்குரிய சாய்ந்தமருது சம்பவத்தின்போது தற்போதைய பிரதி அமைச்சர் கிழக்கு மாகாண தளபதியாகப் பணியாற்றியதால், விசாரணைகளின் வெளிப்படைத்தன்மைக்காக, விசாரணைகள் முடிவடையும் வரை அவரை அப்பதவியிலிருந்து நீக்குவது அவசியம் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |