உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியிலுள்ள மறை கரம் : வெளியான புதிய அறிக்கை

2019 Sri Lanka Easter bombings Sri Lanka Sri Lankan Peoples Easter Attack Sri Lanka Sri Lanka Police Investigation
By Independent Writer Apr 18, 2026 07:56 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது குழுவினரால் மட்டுமே நடத்தப்பட்டிருக்காது எனவும் இந்தச் செயற்பாட்டின் பின்னணியில் ஒரு "மறைமுகக் கை" இருப்பதற்கான சாத்தியக்கூறு இருப்பாதாகவும் ஈஸ்டர் தாக்குதல் குறித்து அண்மையில் வெளியிடப்பட்ட ஒரு புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நினைவு, வலி ​​மற்றும் நம்பிக்கை” என்ற தலைப்பில் சமூகம் மற்றும் மதத்திற்கான மையத்தினால் (CSR) உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் ஏழாவது ஆண்டு நினைவு தினத்திற்கு முன்னதாக இந்த அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த தாக்குதல்கள் குறித்து பல ஆண்டுகளாக பல விசாரணைகள் நடத்தப்பட்ட போதிலும், நீதி இன்னும் முழுமையாக வழங்கப்படவில்லை எனவும், முக்கியமான ஆதாரங்கள் பொதுமக்களுக்கு வெளியிடப்படவில்லை எனவும் இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

நான்கு மாதங்கள் கடந்தும் புனரமைக்கப்படாத வடமராட்சி கிழக்கு - கேவில் வீதி

நான்கு மாதங்கள் கடந்தும் புனரமைக்கப்படாத வடமராட்சி கிழக்கு - கேவில் வீதி

சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது குழுவினர்

தேவாலயங்கள், ஹோட்டல்கள் மற்றும் பிற இடங்களைக் குறிவைத்து ஏப்ரல் 21, 2019 அன்று நடந்த ஒருங்கிணைந்த குண்டுவெடிப்புகளில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்த நிலையில் இது குறித்து குறைந்தது எட்டு தனித்தனி விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியிலுள்ள மறை கரம் : வெளியான புதிய அறிக்கை | New Report Calls For Full Truth On Easter Attacks

இந்தத் தாக்குதல்கள் சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது குழுவினரால் மட்டுமே நடத்தப்பட்டிருக்காது என்பதற்கான அறிகுறிகளை இந்த விசாரணைகளில் வெளிப்படுத்தியுள்ளதுடன் மாறாக, இந்தச் செயல்பாட்டின் பின்னணியில் ஒரு "மறைமுகக் கை" இருப்பதற்கான சாத்தியக்கூறையும் அவை சுட்டிக்காட்டுகின்றன. 

குற்றம் சாட்டப்பட்ட முக்கிய சூத்திரதாரிகள் உட்பட, பொறுப்பான அனைவரையும் வெளிக்கொணர்வது, நீதியை நிலைநாட்டுவதற்கும் எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்களைத் தடுப்பதற்கும் இன்றியமையாததாக உள்ளது என்று அந்த அறிக்கை வலியுறுத்துகிறது.

மேலும், விசாரணைகளில் ஏற்படும் தாமதங்கள், வெளிப்படைத்தன்மை இல்லாமை, மற்றும் புலனாய்வாளர்களின் இடமாற்றம், முக்கிய ஆணையங்களின் முழுமையான அறிக்கைகளை வெளியிடத் தவறுதல் உள்ளிட்ட கூறப்படும் தலையீடுகள் குறித்தும் அது கவலைகளை எழுப்புகிறது.

அதிகரித்த வெப்பத்தினால் ஏற்படும் கண் பாதிப்புகள் : மருத்துவ நிபுணர் எச்சரிக்கை

அதிகரித்த வெப்பத்தினால் ஏற்படும் கண் பாதிப்புகள் : மருத்துவ நிபுணர் எச்சரிக்கை

நீதியை நிலைநாட்டும் முயற்சி

அதன் முக்கிய பரிந்துரைகளில், அனைத்து விசாரணை அறிக்கைகள் மற்றும் ஆதாரங்களை வெளியிடுதல்,அழுத்தங்கள் அல்லது அச்சுறுத்தல்களிலிருந்து புலனாய்வாளர்களுக்குப் பாதுகாப்பு, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிபுணர்களைக் கொண்ட முழு அதிகாரம் பெற்ற ஒரு சுதந்திரமான ஆணையம், பொறுப்பானவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்கள் மீது விரைவான சட்ட நடவடிக்கை ஆகியவற்றைக் இந்த CSR அறிக்கை கோருகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியிலுள்ள மறை கரம் : வெளியான புதிய அறிக்கை | New Report Calls For Full Truth On Easter Attacks

மேலும், இந்தத் தாக்குதல்கள் தொடர்பாக 41 வழக்குகள் வெளிவந்துள்ளன என்பதை அந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது, இது விசாரணைகளின் சிக்கலான தன்மையையும் அளவையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

சமீபத்திய முன்னேற்றங்களை “நம்பிக்கைக்கான அடித்தளம்” என்று குறிப்பிட்டாலும், பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய தொடர்ச்சியான பொது அழுத்தம் தேவைப்படும் என CSR எச்சரிக்கின்றது.

இந்தநிலையில் துயரம் நிகழ்ந்து ஏழு ஆண்டுகள் கடந்த பின்னரும், பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது குடும்பத்தினரும் உண்மையையும் மன அமைதியையும் தொடர்ந்து தேடி வருவதாகக் கூறி, நீதியை நிலைநாட்டும் முயற்சியில் 2026ஆம் ஆண்டை ஒரு திருப்புமுனையாக மாற்றுமாறு அந்த அமைப்பு அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளைப் பெற்ற தாய்

யாழில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளைப் பெற்ற தாய்


you may like this



 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



நாட்டு நடப்பு 300 வது Episode சிறப்பு நேரலை

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026