கொழும்பில் சற்றுமுன்னர் பதிவான துப்பாக்கிச் சூடு
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Dilakshan
கொழும்பு 13 - ப்ளூமெண்டலில் (Bloumendhal) உள்ள தொடருந்து பாதைக்கு அருகில் துப்பாக்சிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் இன்று (18) மதியம் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 38 வயதுடைய ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
