பிரதம நீதியரசரை எப்படி நியமனம் செய்தார் அனுர : எதிர்க்கட்சிகளுக்கு சாட்டையடி..!
தற்போதுள்ள சட்டக் கட்டமைப்பிற்குள், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தாம் விரும்பும் எவரையும் பிரதம நீதியரசராக நியமிக்கும் அதிகாரம் பெற்றிருந்தபோதிலும், அவர் தற்போதைய பிரதம நீதியரசரை மூப்பு அடிப்படையில் நியமித்துள்ளார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், தற்போதைய பிரதம நீதியரசர் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மாறுபட்ட கருத்துக்களை வெளிப்படுத்தி வருவதால், இது குறித்து விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதிகள் நியமித்த நீதிபதிகள்
தற்போதைய நிர்வாகம், உச்ச நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றம் ஆகியவற்றிற்கு எந்தவொரு நீதிபதியையும் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் நியமிக்கவில்லை என்று அவர் வலியுறுத்தினார்.

முன்னாள் ஜனாதிபதிகளான ஜெ.ஆர். ஜெயவர்தன, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் நீதித்துறையில் தங்களுக்கு விருப்பமான நீதிபதிகளை உயர் பதவிகளுக்கு நியமித்த பல நிகழ்வுகள் வரலாற்றில் உள்ளன என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் நினைவு கூர்ந்தார்.
நாமலுக்காக முந்திக்கொண்டு வந்த அர்ச்சுனா! பைத்தியம் என பதில் வழங்கிய மகிந்த ஜெயசிங்கவால் சபையில் வாக்குவாதம்
ஷிரானியின் பதவி நீக்கம்
மேலும், ஷிரானி பண்டாரநாயக்க எவ்வாறு பதவியிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்கு விருப்பமான ஒருவர் நியமிக்கப்பட்டார் என்பது குறித்த விவரங்களையும் அவர் வழங்கினார்.

இத்தகைய சூழலில், தற்போதைய ஜனாதிபதி தனது விருப்பப்படி ஒருவரை நியமிக்க சட்டப்பூர்வமான வாய்ப்பு இருந்தபோதிலும், அவர் இந்த நியமனத்தை ஜனநாயகப் பண்பாகக் கருதப்படும் மூப்புரிமையின் அடிப்படையில் மட்டுமே செய்துள்ளார் என்று லக்மாலி ஹேமச்சந்திரா மேலும் தெரிவித்தார்.
YOU MAY LIKE THIS
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |