QR ஐ அன்று விமர்சித்த அநுர தரப்பிடம் இன்று அதே QR! அரசாங்கமே ஆனாலும் கர்மா தாக்கும்!
2022 ஆம் ஆண்டில் தாம் எதிர்க்கட்சியாக இருந்தபோது கேலியும் விமர்சனமும் செய்த அதே QR எரிபொருள் விநியோக முறையை 4 வருடங்கள் ஆகமுன்னரே தாமும் கையில் எடுக்கவேண்டிவரும் என ஜே.வி.பி மேற்பார்த்த மாலிமாவக்காரர்கள் நினைத்திருக்க முடியாது.
ஆனால் இப்போது அந்த நிலைவந்து இந்த முறை காலவரையின்றி தொடரும் என அரசதரப்பு முனகிக்கொள்ளும் நிலையானது ஈயத்தைப்பார்த்து பித்தளை ஈயென இளித்ததாம் என்ற கதையையும் சற்று நினைவூட்டுகிறது.
அன்றைய ரணில் ஆட்சியில் அப்போதைய எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர 2022 ஓகஸ்டில் அறிமுகப்படுத்திய இந்த QR பங்கீட்டு முறை 2023 செப்டெம்பர் வரை நடைமுறையில் இருந்தது.
அப்போது தாம் கடுமையாக விமர்சித்த அதே முறையை அரசாங்கம் என்ற வகையில் ஜே.வி.பி மேற்பார்த்த மாலிமாவக்காரர்கள் செயற்படுத்துவது ஒருவகையில் அவர்களுக்கும் அரசியல் கர்மா தான்.
நாட்டில் இவ்வாறான பங்கீட்டுமுறை வராது என நேற்றுமுன்தினம் வரை சொல்லிய அரசாங்கம் இலங்கையர்கள் நேற்றுக்காலை கண்விழிக்கும் வேளையில் திடுதிப்பென இந்த விநியோக முறை நடைமுறைக்கு வந்துவிட்டதாக தெரிவித்தது.
இது அவசரகோலத்தில் அள்ளித்தெளிப்பாக மாறி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மீண்டும் நீண்ட வரிசைகளை உருவாகத் தொடங்கிய நிலையில் மத்திய கிழக்கின் ஹோர்மூஸ் நீரிணை சிக்கல் அமெரிக்க அரசதலைவருக்கு பெரும் முள்சிக்கிய விக்கலாக மாறிய பின்னணியில் உள்ளூர் முதல் உலக நிலவரங்களை தாங்கி வருகிறது செய்திவீச்சு….
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |