மகிந்தவை சந்திக்கும் மோடியின் முயற்சிக்கு முட்டுகட்டைபோட்டது அநுர அரசு
இலங்கைக்கு (sri lanka)மூன்றுநாள் பயணமாக வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி(narendra modi) முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை(mahinda rajapaksa) சந்திக்க முயன்றபோதிலும் அநுர அரசால் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை வந்திருந்த இந்திய பிரதமர், ஜனாதிபதி அநுர உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்தார்.அத்துடன் தமிழ் கட்சிகளின் பிரமுகர்களையும் சந்தித்தார்.
மகிந்தவை சந்திக்க சந்தர்ப்பம்
இவ்வாறு அரசியல் தலைவர்களை சந்தித்த அவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க சந்தர்ப்பம் ஒன்றை ஏற்படுத்தி தருமாறு அநுர அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
அனுமதி மறுத்த வெளிவிவகார அமைச்சு
எனினும் வெளிவிவகார அமைச்சு, மோடியின் கோரிக்கையை நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னர் மோடி இலங்கை வந்த போது மகிந்தவை சந்தித்துள்ள போதிலும் அரசாங்கம் இம்முறை சந்திக்க அனுமதிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
