ரணிலின் கொள்கைகளையே பின்பற்றும் அநுர அரசு : கடுமையாக சாடும் சஜித்

Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe Sajith Premadasa IMF Sri Lanka National People's Power - NPP
By Sathangani Dec 09, 2024 06:48 AM GMT
Report

இலங்கையின் தற்போதைய அரசாங்கம் ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) அரசாங்கத்தினால் முன்னெடுத்து வரப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கொள்கைகளையே தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன (Kavinda Jayawardena) தலைமையில் நீர்கொழும்பில் நேற்று (08) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச (Sajith Premadasa) இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், பெரும் மக்கள் ஆணையையும், கூடிய ஆசனங்களையும் பெற்று, நாடாளுமன்ற வரத்தைப் பெற்றுக் கொண்டது தற்போதைய அரசாங்கம்.

கஜேந்திரகுமார் எம்.பி பயணித்த வாகனம் மோதி பெண் பலி!

கஜேந்திரகுமார் எம்.பி பயணித்த வாகனம் மோதி பெண் பலி!

சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாடு

தொடக்கத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாடு குறித்து மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மறந்து விட்டு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தினால் முன்னெடுத்து வரப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளையே தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது.

ரணிலின் கொள்கைகளையே பின்பற்றும் அநுர அரசு : கடுமையாக சாடும் சஜித் | Anura Govt Follows Ranil S Policies Sajith Said

இது கடும் துரோக செயலாகும். மக்களை ஏமாற்றும் செயலாகும். எதிர்க்கட்சியில் இருந்தபோது சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தில் உள்ள குறைபாடுகளை பேசினர். அதனை சரி செய்து புதிய ஒப்பந்தத்துக்கு செல்வதாக மக்கள் மத்தியில் வாக்குறுதியளித்தனர். ஆனால் அதிகாரத்துக்கு வந்த பின்னர் அந்த வாக்குறுதிகளை மீறியுள்ளனர்.

நமது நாடு இருதரப்பு மற்றும் சர்வதேச பிணைமுறி பத்திரதாரர்களுடன் கடன் மறுசீரமைப்பு திட்டத்தை ஆரம்பித்த போது இந்த கடன் மறுசீரமைப்பு மூலம் நாட்டுக்கு எந்த நன்மையும் ஏற்படாது என்று ஐக்கிய மக்கள் சக்தியும் (SJB) மக்கள் விடுதலை முன்னணியும் (JVP) கூறியுள்ளன.

இலங்கையின் சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி

இலங்கையின் சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி

ரணில் விக்ரமசிங்கவின் கொள்கை

சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பிற்குள் இருந்து கொண்டு நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் புதிய சர்வதேச நாணய நிதிய இணக்கப்பாடு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எமது கட்சி பல விடங்களை பரிந்துரைத்தது. அப்போது ஜே.வி.பியும் புதிய கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தைச் செய்து கொண்டு புதிய வேலைத்திட்டத்திற்கு செல்லவுள்ளதாக தெரிவித்தது.

ரணிலின் கொள்கைகளையே பின்பற்றும் அநுர அரசு : கடுமையாக சாடும் சஜித் | Anura Govt Follows Ranil S Policies Sajith Said

வெற்றிபெற்ற பின்னர் தாங்கள் கூறியதை மறந்துவிட்டு, நாட்டு மக்களுக்கு நன்மை பயக்காத ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் முன்னெடுத்த இணக்கப்பாட்டையே தொடர்ந்து வருகிறது.

இதன் காரணமாக, மக்களின் அழுத்தம் மற்றும் கடன்சுமை அதிகரித்துள்ளன. மற்றும் சமூகத்தின் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரான குழந்தைகள், தாய்மார்கள் மற்றும் இளைஞர்கள் பெரும் பாரபட்சமான விளைவைக் எதிர்கொண்டுள்ளனர்.

கடவுச்சீட்டு விநியோகம் குறித்து வெளியான தகவல்

கடவுச்சீட்டு விநியோகம் குறித்து வெளியான தகவல்

மக்கள் விழிப்புடன் இருத்தல் 

இந்த இணக்கப்பாட்டின் மூலம், இறுதியில் செலுத்த வேண்டிய கடனைக் குறைப்பதற்குப் பதிலாக, மேலதிகமாக 2.3 பில்லியன் டொலர் கடனையும் சேர்த்து செலுத்த வேண்டியுள்ளது. ஏற்கனவே இருந்த கடனை விட அதிக கடனை செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது.

ரணிலின் கொள்கைகளையே பின்பற்றும் அநுர அரசு : கடுமையாக சாடும் சஜித் | Anura Govt Follows Ranil S Policies Sajith Said

சர்வதேச பிணைமுறி பத்திரதாரர்களுடனான கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளில் லாசார்ட் கிளிப்பர்ட் சான்ஸ் (Lazard and Clifford Chance) என்ற நிறுவனம் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தியது.

இதே நிறுவனம் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் மூலம் கானாவுக்கு கிடைத்த நிவாரணத்தை எமது நாட்டுக்கு பெற்றுக்கொள்ள முடியாது போனது. எனவே நாடு என்ற வகையில் பாதகமான இணக்கப்பாடுகளில் ஈடுபடாமல், இது தொடர்பில் முதலில் நாடாளுமன்றத்தின் கருத்தை கேட்க வேண்டும்.

எமது நாட்டின் கடன் சுமை அதிகரிக்கும் போது சுகாதாரம், கல்வி, விவசாயம், மீன்பிடி போன்ற துறைகளில் பல பிரச்சினைகள் ஏற்படும். இது தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்“ என சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

கடவுச்சீட்டு விநியோகம் குறித்து வெளியான தகவல்

கடவுச்சீட்டு விநியோகம் குறித்து வெளியான தகவல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, Markham, Canada

10 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

09 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, கொழும்பு, London, United Kingdom

08 Dec, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், உரும்பிராய்

06 Dec, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, இந்தியா, British Indian Ocean Terr., தெஹிவளை

12 Dec, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு

24 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சித்தன்கேணி

13 Dec, 2022
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
நன்றி நவிலல்

கரவெட்டி மேற்கு, Markham, Canada

10 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா, சென்னை, India

29 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, திருகோணமலை, Richmond Hill, Canada

11 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Montreal, Canada

11 Dec, 2024
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Chennai, India

07 Dec, 2025
4ம், 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Toronto, Canada

11 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Toronto, Canada

02 Dec, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
40ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கோப்பாய்

04 Dec, 1985