அனுரமேனியா தமிழ் ஓதுவார்களின் PSTA மறதி!
இலங்கையின் உள்ளூர் களத்தில் தனது ஜே.வி.பி சகபாடிகளுடன் இணைந்து ஜேவிபி பொதிவு சிமார்ட் மூளைகளின் நுண்ணறிவை கசக்கிப் பிழிந்து புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை உருவாக்கியுள்ளது அனுர அரசாங்கம்.
இவ்வாறு ஜேவிபிபொதிவு சிமார்ட்மூளைகளின் நுண்ணறிவு பிரயோகம் உள்ள நிலையில் சிறிலங்கா அரச தலைவர் அனுர நாளை இந்திய தலைநகர் டெல்லியில் வைத்து AI அல்லது Artificial intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான தாக்கத்தை அலசி உரை வழங்கவுள்ளார்.
ஐதேக காலத்தில் தமது ஜேவிபியையும் பதம் PTA (Prevention of Terrorism Act ) எனப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விடவும் அதிக வலுச்சட்டத்தை கொண்டுவர பிரியப்படுவது அம்பலமாகியுள்ளது.
அனுர அரசாங்கம் தற்போது PSTA (Protection of the State from Terrorism Act -பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் ) என்ற பெயரில் உருவாக்கும் சட்டம்
பழைய சட்டத்தை விடவும் அதிக அடக்குமுறைகளைக் கொண்டிருப்பதாக சமூக அமைப்புகளும் அரசியல் பிரதிநிதிகளும் எச்சரிக்கத்தலைப்பட்டாலும் அனுரமேனியா தமிழ் ஓதுவார்களும் ஊதுகுழல்களும் இந்த விடயத்தில் கப்சிப்பென இருக்கிறார்கள்.
அனுரதரப்பு புதிசு கண்ணா புதிசு விளிப்புடன் கொண்டுவரவுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் குறித்து சிங்களத்தின் சில புத்திஜீவிகள் எச்சரிக்கைளை விடுத்துள்ள நிலையில் இந்த விடயங்களை தாங்கிவருகிறது செய்திவீச்சு…
இந்திய-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தேசிய பாதுகாப்பிற்கு சிறந்த உத்தரவாதம் : அமைச்சர் பிமல் பெருமிதம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |