அநுர தலைமையில் யாழில் ஆரம்பமாகும் தேசிய வீடமைப்புத் திட்டம்
தேசிய வீடமைப்புத் திட்டத்தின் ஆரம்ப விழா யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாக வீடமைப்பு கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க (Susil Ranasinghe) தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரி - மீசாலையில் இன்று (16) காலை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்த முயற்சியின் கீழ் இந்த ஆண்டுக்குள் 31,000 வீடுகளை நிர்மாணிக்கத் திட்டங்கள் உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
உள்நாட்டு யுத்தம்
2026 ஆம் ஆண்டுக்கான தேசிய வீடமைப்பு திட்டம், "சொந்தமாக ஒரு இடம் - ஒரு அழகான வாழ்க்கை" என்ற தொனிப்பொருளில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வீடமைப்பு கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி. சரத் அண்மையில் தெரிவித்திருந்தார்.

அததுடன் உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெயர்ந்தவர்களுக்கு தலா 2 மில்லியன் ரூபாய் செலவில் 500 வீடுகள் கட்டப்படும் என்று பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
வடக்கு மாகாணத்தில் இடம்பெயர்ந்தவர்களுக்காக 2,500 வீடுகளை கட்ட அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டு ஒரு வீட்டிற்கு ஒதுக்கீடு 1.5 மில்லியன் ரூபாய் என்றும், ஆனால் மாவட்ட செயலாளர் மற்றும் பிற அதிகாரிகளின் கோரிக்கைகளைத் தொடர்ந்து 2 மில்லியனாக அதிகரிக்கப்பட்டதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |