மறைந்த ஆனமடுவ ஸ்ரீ தம்மதஸ்ஸி தேரருக்கு ஜனாதிபதி அஞ்சலி
மறைந்த அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் ஆனமடுவ ஸ்ரீ தம்மதஸ்ஸி அனுநாயக்க தேரருக்கு (Anamaduwe Dhammadassi Thero) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள அஸ்கிரி மகா விஹாரையின் உடுகம ஸ்ரீ புத்தரக்கித மகா தேரரின் நினைவு மண்டபத்திற்கு நேற்று இரவு (22) சென்ற ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்.
அத்துடன் அஸ்கிரிய விஹாரையின் மகா சங்கத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்திருந்தார்.
சந்தித்து கலந்துரையாடல்
மேலும் அஸ்கிரி மகா விஹாரையின் மகா நாயக்கர் வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரரை ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடினார்.
அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் கடந்த 20 ஆம் திகதி காலமானார்.
மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பௌத்த மதத்தின் முக்கிய பீடங்களில் ஒன்றான அஸ்கிரிய பீடத்தின் துணை மகாநாயக்கராக ஆனமடுவ தம்மதஸ்ஸி தேரர் சேவையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
