ரணிலுடன் ஆட்சி செய்த போது அநுரவிற்கு படலந்த நினைவிற்கு வரவில்லையா..! எழுப்பப்படும் கேள்வி
நல்லாட்சி அரசில் ரணிலுடன்(rani wickremesinghe) இணைந்து ஆட்சி செய்தபோது நினைவிற்கு வராத படலந்த படுகொலை அறிக்கை மஹ்தி ஹசனின் பேட்டிக்கு பின்னரா வந்தது என ஜனாதிபதி அநுரவிடம்(anura kumara dissanayake) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த (Premnath C. Tolawatta)கேள்வியெழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மஹ்தி ஹசனின் பேட்டிக்கு பின்னரா படலந்த நினைவுக்கு வந்தது
தங்களது கட்சி உறுப்பினர்கள் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டதாக ஜே வி பி யினர் கூறும் படலந்த தொடர்பில் மஹ்தி ஹசனின் பேட்டிக்கு பின்னரா அநுர குமார திஸாநாயக்கவுக்கு படலந்த நினைவுக்கு வந்தது
நல்லாட்சி அரசில் ரணில் விக்ரமசிங்கவோடு இணைந்து ஆட்சி செய்த போது அநுர குமார ,பிமல் ரத்னாயக குழுவிற்கு படலந்தை கொமிஷன் நினைவுக்கு வரவில்லையா என அவர் கேள்வி எழுப்பினார்.
ஜே.வி.பியின் கொலைகளுக்கும் தண்டனை
88/89 காலத்தில் ஜே வி பி அரச வங்கிகளில் கொள்ளையடித்த பணத்தையும் அவர்கள் செய்த கொலைகளுக்கும் தண்டனை வழங்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்