சீனாவை தூக்கி எறிந்த அப்பிள் - இந்தியாவை குறிவைத்து அதிரடி நகர்வு
ஐபோன் தயாரிப்பு
அப்பிள் நிறுவனம் தனது ஐபோன் எனப்படும் தற்போதைய முதன்மை நுண்ணறிபேசியான ஐபோன் 14 ஐ சீனாவில் உற்பத்தி செய்யாமல் இந்தியாவில் உற்பத்தி செய்யப்போவதாக அறிவித்துள்ளது
சீனாவின் கொரோனா தடுப்புக்கொள்கை மற்றும் அமெரிக்காவுடனான பதற்ற நிலைமைகளை அடுத்து இந்த முக்கியமான முடிவை அப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் அப்பிள் தனது புதிய முதன்மை நுண்ணறிபேசியான ஐபோன் 14 கருவிகளை இந்தியாவில் தயாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளதுடன் இந்த முடிவு குறித்து தமது நிறுவனம் மகிழ்ச்சியடைவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் உற்பத்தி
அப்பிள் புதிய நுண்ணறிபேசிகளை அறிமுகப்படுத்திய சில நாட்களில் வந்துள்ள இந்த அறிவிப்பில் ஐபோன் 14 இன் உற்பத்தி இந்தியாவில் மிக விரைவில் ஆரம்பிக்கப்படுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் ஐபோன் கருவிகளை உற்பத்தி செய்வதற்கு ஒரு தொழிற்கூடம் இருப்பதும் அப்பிளின் ஒட்டுமொத்த உற்பத்தியில் சுமார் 3 வீதம் கடந்த ஆண்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.