வடக்கு மாகாண சபையில் சிங்கள ஊழியர்கள் விரைவில் - வலுக்கும் எதிர்ப்பு!
வடக்கு மாகாண சபையில் உள்ள சிற்றூழியர்கள் வெற்றிடங்களுக்கு சிங்கள ஊழியர்களை நியமிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகின்றது.
முன்னாள் அதிபர் கோட்டாபயவின் காலத்தில் ஒரு இலட்சம் பேருக்கான வேலை வாய்ப்புத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டவர்களில் 100 பேர் வடக்கு மாகாண சபைக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும், வடக்கு மாகாண சபையில் சிற்றூழியர், தகைசார் பணியாளர் உட்பட சுமார் 1200 வெற்றிடங்கள் இன்னும் காணப்படுகின்றன.
தென்பகுதி ஊழியர்கள்
குறித்த ஊழியர் வெற்றிடங்களுக்கு ஏனைய மாகாணங்களில் தெரிவு செய்யப்பட்டவர்களிலிருந்து 1100 பேரை நியமிக்குமாறு வடக்கு மாகாண சபையால் கோரிக்கை முன்வைக்கப்படவுள்ளது.
இந்தநிலையில், தென்பகுதியிலிருந்து சிங்களவர்களை குறித்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு நியமிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
வடக்கு மாகாணத்தில் பெருமளவானோர் வேலைவாய்ப்பின்றி உள்ளநிலையில் தென்பகுதி ஊழியர்கள் நியமிக்கப்படுவதற்கு தற்போது எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
