பாகிஸ்தானின் எந்த மூலையையும் தாக்கி அழிப்போம்: இந்திய இராணுவ அதிகாரியின் அறிவிப்பால் பரபரப்பு
“பாகிஸ்தானில்(pakistan) எந்த பகுதியையும் துல்லியமாக சென்று தாக்கும் திறன் இந்திய இராணுவத்துக்கு(india army) உண்டு,'' என இந்திய இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய இராணுவத்தின் வான் பாதுகாப்பு பணிப்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் சுமர் இவன் டிகுன்ஹா செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது,
பாகிஸ்தானின் எந்த மூலையையும் தாக்க முடியும்.
பாகிஸ்தான் அச்சுறுத்தலை சமாளிக்க தேவையான தளவாடங்கள் இந்தியாவிடம கைவசமாக உள்ளன. ஒட்டு மொத்த பாகிஸ்தானும், இந்தியாவின் தாக்குதல் 'இலக்கில்' தான் உள்ளது.
பாகிஸ்தானின் எந்த இடத்தையும் துல்லியமாக தாக்கும் திறன் இந்திய இராணுவத்திற்கு உண்டு. ராவல்பிண்டியில் உள்ள பாகிஸ்தான் இராணுவ தலைமைகத்தை கைபர் பக்துன்க்வாவிற்கு மாற்றினாலும் ஒழிவதற்கு குழிகளை தேட வேண்டியிருக்கும்.
ஆயிரம் ட்ரோன்களை பாகிஸ்தான் ஏவியது
சமீபத்தில் ஏற்பட்ட மோதலில் 800 முதல் ஆயிரம் ட்ரோன்களை பாகிஸ்தான் ஏவியது. ஆனால், அவை பெரும்பாலும் அழிக்கப்பட்டு விட்டன.
ஆளில்லாத விமானங்களில் வெடிமருந்துகள் இருந்தது. பொது மக்கள் மற்றும் இராணுவ முகாம்கள் மீது அவற்றிற்கு குறியாக இருந்தன. ஆனால், அவற்றால் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதை நாங்கள் உறுதி செய்தோம். சாமானிய மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
