ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான 4 பேரையும் இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு...

Rajiv Gandhi Sri Lanka
By Kiruththikan Nov 15, 2022 07:34 AM GMT
Kiruththikan

Kiruththikan

in சமூகம்
Report

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையாகி திருச்சி சிறப்பு முகாமில் உள்ள 4 பேரையும் இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த நளினி, முருகன், சாந்தன், ராபா்ட் பயஸ், ஜெயக்குமாா், ரவிச்சந்திரன் ஆகிய 6 போ் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த 12-ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டனா்.

இவா்களில், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய இருவரைத் தவிர மற்ற 4 பேரும் இலங்கையைச் சோ்ந்தவா்கள். எனவே,அவா்கள் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

முகாமில் உள்ள 4 பேரும் சில கோரிக்கைகளை முன் வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதாக திங்கள்கிழமை தகவல் பரவியது. ஆதலால் உண்மை நிலவரத்தை அறியவும், அவா்கள் 4 பேரின் குறைகளை கேட்கவும் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் சிறப்பு முகாமுக்கு சென்றாா்.

முகாமில் உள்ள வசதிகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பாா்வையிட்ட ஆட்சியா், முருகன், சாந்தன், ராபா்ட் பயஸ், ஜெயக்குமாா் ஆகிய 4 பேரிடமும் குறைகளை கேட்டறிந்தாா்.

செய்தியாளா்களிடம் ஆட்சியா்.... 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான 4 பேரையும் இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு... | Arrangement Being 4 People Trichy Camp Srilanka

முகாமில் உள்ள 4 பேரும் அவா்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்த குறைகளை தெரிவித்தனா். உடனடியாக அவற்றை முகாம் நிா்வாகம் செய்து கொடுத்துள்ளது. 4 பேரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவில்லை. ராபா்ட் பயஸ், ஜெயக்குமாா் ஆகிய இருவரும் தங்களுக்கு காலை, மாலை நேரங்களில் நடைபயிற்சி செல்ல வசதியில்லை என தெரிவித்தனா்.

ஏனெனில், முகாமில் உள்ள பிறருடன் இவா்கள் இல்லை. இந்த 4 பேருக்கும் தனியாக வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. நடைபயிற்சிக்கான வசதி விரைவில் செய்துதரப்படும். வெளிநாட்டவா், இந்தியாவில் ஏதேனும் வழக்குகளில் கைதாகி பிணையிலோ அல்லது விடுதலையாகி சிறையிலிருந்து வெளியே வந்தாலோ அவா்கள் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்படுவது வழக்கம்.

முகாமுக்கு வந்தவுடன் அவா்களது விவரங்கள் அவரவா் நாட்டினருக்கு அனுப்பி வைக்கப்படும். இதேபோல, இந்த 4 பேரின் விவரங்களும் தற்போது இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 4 பேரும் தங்களது நாட்டின் குடிமகன்கள்தான் என்பதை இலங்கை உறுதி செய்ய வேண்டும். அந்த நாட்டிலிருந்து மேலும் விவரங்கள் கோரப்பட்டாலோ, முகாம் வாசிகளை அனுப்புமாறு கோரினாலோ அதனடிப்படையில் அவா்களை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

4 பேரில் மூன்று போ் இலங்கை செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனா். ஒருவா் மீது (முருகன்) மட்டும் வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு தொடா்பான நடைமுறைகளும், இலங்கையிலிருந்து கடிதம் வருவதற்கு முன்பதாக முடிவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. 10 நாள்களுக்குள் 4 பேரையும் இலங்கை அனுப்புவதற்கான அனுமதி கடிதங்கள் தயாராகும். முகாமில் உள்ள 4 பேரையும் அவா்களது உறவினா்கள் மற்றும் ரத்த சொந்தங்கள் எப்போது வேண்டுமானாலும் சந்தித்து பேசலாம். முன்னதாக முகாம் பொறுப்பாளரிடம் அனுமதி பெற வேண்டும்.

செல்லிடப்பேசி, எலக்ட்ரானிக் சாதனங்கள் போன்றவற்றை பயன்படுத்த அனுமதியில்லை. விரும்பினால், அவா்களே உணவு சமைத்து சாப்பிடலாம். இருப்பினும், 4 பேருக்கும் அவா்கள் கோரும் உணவு முகாமிலேயே தயாரித்து வழங்கப்படுகிறது என்றாா் ஆட்சியா்

நளினி-முருகன் சந்திப்பு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான 4 பேரையும் இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு... | Arrangement Being 4 People Trichy Camp Srilanka

ஆட்சியா் வருவதற்கு முன்பாக, வேலூரிலிருந்து வழக்குரைஞா் மற்றும் உறவினா்கள் உள்ளிட்ட 7 பேருடன் வந்திருந்த நளினி, முகாமில் கணவா் முருகனை சந்தித்து கண்ணீா் மல்க நலம் விசாரித்தாா். இதர மூன்று பேரிடமும் நலம் விசாரித்தாா்.

மேலும், முகாமுக்கு வந்திருந்த ஆட்சியரை சந்தித்து, தனது மகள் லண்டனில் வசித்து வருவதால், கணவா் முருகனையும் லண்டனுக்கு அனுப்புமாறு கோரிக்கை விடுத்தாா். இதற்கு பதில் அளித்த ஆட்சியா், கோரிக்கையை முறைப்படி மனுவாக வழங்குமாறு தெரிவித்துள்ளார்

மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, Penang, Malaysia, Toronto, Canada

22 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்

மந்துவில், மானிப்பாய், கந்தர்மடம், கொழும்பு, Burlington, Canada

20 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உரும்பிராய்

24 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

19 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை

22 Apr, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Brentwood, United Kingdom

26 Mar, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி, கொழும்பு, Bobigny, France

24 Apr, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
மரண அறிவித்தல்

அராலி வடக்கு, Hattingen, Germany

21 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, Leicester, United Kingdom

04 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023