பசில் ராஜபக்சவுக்கு மீண்டும் பிடியாணை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக மாத்தறை நீதவான் நீதிமன்றம் மீண்டும் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாத்தறை பிரவுன்ஸ் ஹில் பகுதியில் உள்ள சுமார் ஒன்றரை ஏக்கர் காணி கொள்வனவு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, காவல்துறை நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (21) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் பசில் ராஜபக்ச இரண்டாவது முறையாகவும் நீதிமன்றத்தில் முன்னிலையாகாததைக் கருத்தில் கொண்டு இந்த பிடியாணை உத்தரவை நீடித்து மாத்தறை பிரதான நீதவான் சதுரங்க எரங்க திஸாநாயக்க உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தில் முன்னிலை
அத்துடன், அவரது வெளிநாட்டு பயணத்திற்கும் நீதிமன்றம் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், பசில் ராஜபக்சவின் நான்கு பிணையாளர்களுக்கும், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதை உறுதி செய்யுமாறு பிரதான நீதிபதி கடுமையாக எச்சரித்தார்.
இந்தநிலையில், குறித்த வழக்கின் அடுத்த விசாரணை ஓகஸ்ட் 18ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
3 நாட்கள் முன்