ஆசியக் கிண்ண துடுப்பாட்டப் போட்டி : பாகிஸ்தான் - ஹொங்கொங் அணிகள் இன்று பலப்பரீட்சை
ஆசியக் கிண்ண துடுப்பாட்டப் போட்டியின் ஆறாவது போட்டி இன்றையதினம்(2) இடம்பெற இருக்கின்றது.
இன்றைய போட்டியில் குழு A இல் உள்ள பாகிஸ்தான் மற்றும் ஹொங்கொங் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியானது அபுதாபியில் உள்ள ஷார்ஜா சர்வதேச துடுப்பாட்ட மைதானத்தில் இரவு 7:30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
அணியின் தலைமைகள்
இடம்பெறவுள்ள போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாம் (Babar Azam) தலைமை தாங்குவதுடன் ஹொங்கொங் அணிக்கு நிஜாகத் கான் (Nizakat Khan) தலைமை தாங்கவுள்ளார்.
இதேவேளை, நேற்று இடம்பெற்ற இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்திருந்தது.
இதன் மூலம் இலங்கை அணி 3ஆவது அணியாக சுப்பர் 4 சுற்றில் விளையாட தகுதிபெற்றது.
ஆப்கானிஸ்தான், இந்தியா ஆகிய அணிகள் ஏற்கனவே சுப்பர் 4 சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.