தாக்கப்பட்ட ஊடகவியலாளர் நேரில் சென்று பார்வையிட்ட வியாழேந்திரன்!

Srilanka journalist Attacked Viyalendiran
By MKkamshan Feb 27, 2022 07:47 AM GMT
Report

பேருந்து நிலையம் அகற்றுவது தொடர்பாக வந்தாறுமூலை பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது கிழக்கு பல்கழலைக்கழகத்தில் பணிபுரியும் ஒருவர் தாக்குதல் நடத்தியதில் லட்சுமனன் தேவபிரதீபன் என்ற ஊடகவியலாளர்   நேற்று காலை செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்தில் தாக்கப்பட்டதாக கூறப்படும் ஊடகவியலாளர் செங்கலடி வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்று வரும் நிலையில், இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் ( Viyalendiran) நேற்று இரவே நேரில் சென்று பார்வையிட்டார்.

ஊடகவியலாளர் தாக்கப்பட்டமை தொடர்பில் நீதியான விசாரணையினை முன்னெடுக்குமாறு ஏறாவூர் காவல்துறையினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக குறித்த ஊடகவியலாளரை வைத்தியசாலையில் பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

"ஊடகவியலாளர்களை என்றும் மதிப்பவன் நான். கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் நடாத்திய எத்தனையோ போராட்டங்களில் கலந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவன் நான்.

அத்தோடு கடந்த ஆட்சியில் கல்குடா பகுதியில் நிறுவப்பட்ட எத்தனோல் தொழிற்சாலை தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களான சசிகரன் மற்றும் நித்தியானந்தன் ஆகியோர் தாக்கப்பட்ட போது வீதி வீதியாக இறங்கி அவர்களுக்காக குரல் கொடுத்தது நானும் நான் சார்ந்த பிள்ளைகளுமே என்பதை யாராலும் மறுக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது.

குறித்த சம்பவம் தனிப்பட்ட ஒரு குடும்பத்தாரிற்கும் குறித்த கிராமத்தை சேர்ந்த கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கும் இடையில் இடம்பெற்றுள்ளதே தவிர, தாக்குதலை நடாத்தியதாக ஊடகவியலாளர் குறிப்பிடும் குறித்த கிராம அபிவிருத்தி சங்க உப தலைவர் எமது அலுவலக உத்தியோகத்தரும் கிடையாது. எமது கட்சியின் உறுப்பினரும் கிடையாது.

அத்துடன் எனது உத்தியோகத்தர்கள் யாரும் அவரை குறித்த இடத்திற்கு அழைத்து வரவும் இல்லை. ஊடகவியலாளர் தாக்கப்பட்ட அந்த சம்பவத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.

இந்த விடையத்தை பிழையான முறையில் திரிபுபடுத்தி, இதனை வைத்து யாரும் அரசியல் இலாபம் தேட முயற்சிக்க வேண்டாம்" என மேலும் தெரிவித்துள்ளார்.


GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026