பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு கிடைக்கப்போகும் உதவித் தொகை
பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு மாதாந்தம் 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கா(anura kumara dissanayake) தெரிவித்துள்ளார்.
இன்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கன்னி வரவு செலவுத்திட்டத்தை நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படும்
இவ்வாறு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவில் 2,000 ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படும். மீதி 3,000 ரூபாய் அவர்களில் சட்டரீதியான பாதுகாவலருக்கு வழங்கப்படும்.
இதற்காக 2025 வரவு செலவு திட்டத்தில் 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
இந்த பிள்ளைகள் வீடுகளை நிர்மாணித்துக் கொள்ள ஒரு மில்லியன் ரூபாய் வழங்கப்படவுள்ளது.
அதற்காக 2025 வரவு செலவு திட்டத்தில் 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
