நாளை வங்கியில் வைப்பிலிடப்படும் அஸ்வெசும கொடுப்பனவுகள்...!
சிரேஷ்ட பிரஜைகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு குறித்து நலன்புரி நன்மைகள் சபை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, இதனுடன் தொடர்புடைய கொடுப்பனவுகள் மார்ச் 26ஆம் திகதி வழங்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இதன் மூலம் 70 வயதுக்கு மேற்பட்ட 622,462 சிரேஷ்ட பிரஜைகள் இந்தக் கொடுப்பனவைப் பெறவுள்ளனர்.
மில்லியன் ரூபாய்
இதற்காக மொத்தம் 3.1 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இரண்டாம் கட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட 71,339 சிரேஷ்ட பிரஜைகளுக்கு மொத்தம் 356 மில்லியன் ரூபாய் வழங்கப்படவுள்ளது.

இந்தத் தொகைகள் அந்தந்தப் பயனாளிகளின் கணக்குகளில் வியாழக்கிழமை வரவு வைக்கப்படும் என்று நலன்புரி சபை தெரிவித்துள்ளது.
பயனாளிகள் மார்ச் 26 முதல் தங்களது கணக்குகளின் ஊடாக அஸ்வெசும நலன்புரி நிதிப்பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் சபை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர்களின் பிரச்சினையை 1965இல் ஏற்றுக்கொண்ட டட்லி செல்வா ஒப்பந்தம்… 17 மணி நேரம் முன்