மாணவர்கள் மீது மோசமான தாக்குதல்,ஆசிரியர்கள் மற்றும் விடுதி காப்பாளர்கள் கைது
மாணவர்கள் மீது மோசமாக தாக்குதல் நடத்தினார்கள் எனத் தெரிவித்து தனியார் பாடசாலை ஒன்றின் நான்கு ஆசிரியர்கள் மற்றும் இரண்டு விடுதி காப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி, பொக்காவல பிரதேசத்தில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காவல்துறை ஊடகப்பிரிவு விடுத்துள்ள தகவல்

5 ஆண் மாணவர்களையும் 5 பெண் மாணவர்களையும் பாடசாலை விடுதிக்குள் வைத்து கடுமையாக தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒழுக்காற்று பிரச்சினை காரணமாகவே 10 மாணவர்களும் தாக்கப்பட்டதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நீதிமன்றின் உத்தரவு

கண்டி காவல்துறை பிரிவுக்குட்பட்ட சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினால் கைது செய்யப்பட்ட ஆசிரியர்களும், விடுதி காப்பாளர்களும் கண்டி நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போது, மார்ச் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கண்டி சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் மாணவர்கள் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதுடன்,
சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.