பாடசாலை சென்ற 12 வயது மாணவியை கடத்த முயற்சி
12 வயது சிறுமியை கடத்த முயற்சி
பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 12 வயது சிறுமியை கடத்த முற்பட்ட சம்பவம் இரத்தினபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
இரத்தினபுரி பாடசாலையில் நான்காம் வருடத்தில் கல்வி கற்கும் சிறுமியான மாணவி இன்று காலை பாடசாலைக்கு நடந்து சென்றுள்ளார்.

முககவசம் அணிந்திருந்த மர்ம நபர்
இதன்போது புதர் ஒன்றுக்கு பின்னால் முககவசம் அணிந்திருந்த மர்ம நபர் திடீரென வீதிக்கு வந்து மாணவியின் கழுத்துப்பட்டியை பிடித்து கைகளை கட்டி கடத்த முயற்சித்துள்ளார்.
இதனை அவதானித்த அருகில் உள்ள தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண் ஒருவர் உடனடியாக குறித்த இடத்திற்கு வருகை தந்து சிறுமியை காப்பாற்றியதாக இரத்தினபுரி காவல்துறை சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கடத்தலில் ஈடுபட்டவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.இந்த சம்பவம் இன்று காலை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.