வடக்கு கிழக்கில் பௌத்தமயமாக்கல் : கண்டித்து தமிழர் தாயகத்தில் கவனயீர்ப்பு போராட்டம்
Missing Persons
Vavuniya
Protest
By Independent Writer
Courtesy: kapil
வடக்கு கிழக்கு தமிழர் தாயக பகுதியில் அரசினால் மேற்கொள்ளப்படும் பௌத்தமயமாக்கலினை கண்டித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று(22) கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்
வவுனியா தபாலகத்திற்கு அருகாமையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கம் குறித்த கவனியீர்ப்பு போராட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நடந்தது என்ன..!
இதன்போது பௌத்தமயமாக்கலை கண்டிப்பதோடு காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள் தொடர்பில் நீண்டகாலமாக எவ்வித பதிலும் கிடைக்காத நிலையில் அவர்களின் உறவினர்கள் காத்திருப்பதாகவும் தெரிவித்து பதாதைகளை ஏந்தியவாறும், அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளையும் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
2ம் ஆண்டு நினைவஞ்சலி