பூமிக்கு வரும் மர்ம சமிக்ஞை - ஏலியன்கள் அழைக்கிறதா : கண்டுபிடிக்க திணறும் விஞ்ஞானிகள்
அவுஸ்திரேலிய (Australia) விஞ்ஞானிகள் விண்வெளியில் இருந்து 44 நிமிடங்களுக்கு ஒருமுறை வித்தியாசமான சமிக்ஞைகள் பூமிக்கு வருவதை கண்டுபிடித்துள்ளனர்.
விண்வெளியில் இருந்து எக்ஸ்ரே மற்றும் ரேடியோ கதிர்கள் வெளியாவது இயல்பான ஒன்றாக உள்ளது. அவ்வப்போது தொலைதூர நட்சத்திரங்களில் இருந்து இதுபோன்ற கதிர்கள் வெளியாகும்.
ஆனால், 1-2 விநாடிகள் மட்டுமே அவை பெறப்படும். அடுத்த சமிக்ஞை எப்போது வரும் என்பதை நம்மால் உறுதியாக கூற முடியாது.
மர்ம சமிக்ஞை
இந்த நிலையில், அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் Australian Square Kilometre Array Pathfinder மற்றும் நாசாவின் சக்திவாய்ந்த சந்திரா எக்ஸ்ரே தொலைநோக்கியை பயன்படுத்தி மர்ம சமிக்ஞையை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த சமிக்ஞையானது 44 நிமிடங்களுக்கு ஒருமுறை வருவதையும், சுமார் 2 நிமிடங்கள் வரை நீடிப்பதையும் அவர்கள் உறுதி செய்துள்ளனர்.
இதனை முன்கூட்டியே கணிக்க முடியும் என்றும், எவ்வளவு நேரம் நீடிக்கும் என்பதையும் கூற முடியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
ஏலியன்கள்
மேலும், ஏலியன்கள் இதனை அனுப்புகின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
விண்வெளியில் நமக்கு தெரிந்ததெல்லாம், கோள்கள், குறுங்கோள்கள், விண்கற்கல், வால் நட்சத்திரகள், நட்சத்திரங்கள், கருந்துளைகள்தான். இதைத்தாண்டி புதியதாக எதுவும் கிடையாது.
அப்படிப்பார்த்தால், நமக்கு தெரியாத இன்னும் ஏதோ ஒரு பொதுவான பொருள் விண்வெளியில் இருக்கிறது. அது நீண்ட காலத்திற்கு அழிவில்லாமல் இருக்கலாம். உதாரணத்திற்கு கருந்துளை அழிய பல கோடி, கோடி, கோடி ஆண்டுகள் ஆகும்.
அதைவிட நீண்ட ஆயுளை கொண்ட ஏதோ ஒன்று விண்வெளியில் இருக்கிறது. அதுதான் தொடர்ந்து சிக்னலை அனுப்பிக்கொண்டே இருக்கிறது.
பூமிக்கு சமிக்ஞை அனுப்புகிறது என்பதைவிட, அதன் சமிக்ஞை கடந்து செல்லும் பாதையில் நாம் இருக்கிறோம் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். அப்படியெனில் அது என்ன? இதுதான் மண்டையை பிளக்கும் கேள்வியாக இருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
