வெளிநாடொன்றில் இருந்து உடன் வெளியேறுமாறு உத்தரவிட்ட அவுஸ்திரேலியா!
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அவுஸ்திரேலிய அரசு ஐக்கிய அரபு அமீரகத்தில்(UAE) பணியாற்றும் தனது அதிகாரிகளின் குடும்பத்தினரை அந்த நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளது.
பாதுகாப்பு சூழ்நிலை மோசமடைந்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் தெரிவித்துள்ளார்.
பயண எச்சரிக்கை
“புதிய அறிவுறுத்தலுக்கு ஏற்ப எங்கள் பயண ஆலோசனையும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியர்கள் UAEக்கு பயணம் செய்ய வேண்டாம் என தொடர்ந்து அறிவுறுத்துகிறோம்,” என்று அவர் சமூக ஊடகத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

இதன்படி, வளைகுடா பிராந்தியத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதால், UAEக்கு பயணம் செய்ய வேண்டாம் என அவுஸ்திரேலியா தனது பயண எச்சரிக்கையையும் புதுப்பித்துள்ளது.
ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளைச் சுற்றியுள்ள மோதலுடன் தொடர்புடைய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால், வளைகுடா நாடுகளின் பல பகுதிகளில் வான்வழி போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |