2026 இல் உலகப் பொருளாதாரம் சரிவடையும் - உலகப் போர் மூளும் : பாபா வங்காவின் அதிர்ச்சிக் கணிப்பு
2026 ஆம் ஆண்டில் ஒரு குறிப்பிடத்தக்க உலகளாவிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் எனவும் உலக நாடுகளுக்கு இடையே ஒரு போர் நடக்கும் எனவும் பாபா வங்கா கணிப்பிட்டுள்ளார்.
2025 ஆம் ஆண்டு உலகம் பல இயற்கை பேரிடர்கள், விபத்துகள், வர்த்தகப் போட்டிகள், போர்களால் நிறைந்துள்ளது. இந்த வருடம் முடிவடைய இன்னும் இரண்டரை மாதங்களே உள்ள நிலையில், 2026 இல் நிலைமை மேம்படும் என்று பலர் நம்புகிறார்கள்.
ஆனால், பல்கேரியாவின் புகழ்பெற்ற தீர்க்கதரிசி பாபா வங்காவின் பல கணிப்புகள் நிஜமாக நடந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு குறித்த இவரின் கணிப்பு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
டிஜிட்டல் நாணயங்களின் மதிப்பு
பாபா வங்கா கணிப்புப்படி, 2026 ஆம் ஆண்டு நடப்பு ஆண்டை விட மிகவும் மோசமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், உலகப் பொருளாதாரம் சரிவடையும் அபாயம் உள்ளது. சர்வதேச சந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பொருளாதார மந்தநிலை ஏற்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், பணம் மற்றும் டிஜிட்டல் நாணயங்களின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடையும். ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருக்கும் நாடுகளுக்கு இந்த நிலைமை மேலும் கடினமானதாக மாறலாம்.
இதன் உச்சமாக 2026 இல் உலக நாடுகளுக்கு இடையே ஒரு போர் நடக்கும் என்று பாபா வாங்கா எச்சரித்துள்ளார். அவர் கூறிய இந்தப் போரே மூன்றாம் உலகப் போராக மாறக்கூடும் என பலரும் அஞ்சுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
