இன்னும் 3 மாதத்தில் வரப்போகும் பேரழிவு: பாபா வங்காவின் பேரதிர்ச்சி கணிப்பு
இன்னும் மூன்றே மாதத்தில் நடக்கபோகும் பேரழிவு பற்றி ஜப்பானின் பாபா வங்கா என்று அழைக்கப்படும் பெண்ணின் கணிப்பு உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதன்படி, எதிர்வரும் ஜூலை மாதத்தில் உலகை மிக பயங்கர சுனாமி தாக்கக் கூடும் என்றும் அதில் ஜப்பான் பெரிதும் தாக்கப்படும் எனவும் குறித்த பெண் கணித்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஜப்பானின் பாபா வங்கா என்று அழைக்கப்படும் ரையோ தத்சுகி (Ryo Tatsuki) என்ற பெண், மிக விசித்திரமான முறையில், துல்லியமாக உலகில் நிகழவிருக்கும் அபாயங்கள் குறித்து முன்னமே கணித்து வருகிறார், அவை நிறைவேறியும் இருக்கின்றது.
சுனாமி பேரலை
இந்நிலையில், 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் உலகையே புரட்டிப்போடும் சுனாமி பேரலைகள் தாக்கக் கூடும் என்று அவர் முன்கணித்திருப்பதாகக் கூறியிருக்கிறார்.
இதற்கு முன்பும், இவரது கணிப்புகள் துல்லியமாக நடந்திருப்பதால், அனைத்து கணிப்புக்களும் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
மங்கு கலை ஓவியராக உலகுக்கு அறிமுகமான இவர் தனது கனவுகளில் காணும் சம்பவங்களை வரையத் தொடங்கினார். வரைந்தது போலவே அவ்வாறே நடந்தும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அவரது ஓவியங்களை ஆதரவாளர்கள் தொடர்ந்து வந்துள்ள நிலையில், அடுத்தடுத்து உலகில் நடந்த சம்பவங்களோடு இவரது ஓவியங்கள் ஒத்துப்போவதை கண்டுள்ளனர்.
எரிமலை சீற்றம்
இதை தொடர்ந்து அவர் தற்போது தெற்கு ஜப்பானின் கடல்பரப்பு கொதிப்பது போன்று ஓவியம் வரைந்திருக்கிறார்.
அதாவது, ஜப்பானின் கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலை சீற்றம் ஏற்பட்டு அதன் காரணமாக மிக மோசமான சுனாமி ஏற்படலாம் எனவும் ஜப்பான் மட்டுமின்றி தைவான், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளும் சுனாமியால் பாதிக்கப்படுவதை ஓவியமாக வரைந்துள்ளார்.
இதனால் இந்த நிகழ்வு நடக்குமா நடக்காதா என்ற அச்சத்திலும் குழப்பத்திலும் மக்கள் ஆழ்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
