உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை! இந்தியாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
இந்தியாவில் பச்சிளம் குழந்தை ஒன்று விவசாய நிலத்துக்குள் உயிரோடு புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தில் உள்ள கம்போய் கிராமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள விளைநிலத்தில் மண்ணுக்குள் இருந்து பிஞ்சுக்குழந்தையின் கைகள் வெளியில் தெரிந்ததோடு அழுகை சத்தமும் கேட்டிருக்கிறது.
இதைக்கண்ட அப்பகுதி விவசாயி, அப்பகுதியினரின் உதவிக்கு அழைத்த நிலையில் குழந்தையை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
அதேவேளை, கண்டெடுத்த குழந்தையை ஹிமாத்நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
முதலில் பார்த்த விவசாயி கூறுகையில்
எப்போதும்போல வேலைக்காக விவசாய நிலத்துக்கு சென்றிருந்தேன். அப்போதுதான் அங்கு ஒரு குழந்தையின் கைகளை பார்த்தேன்.
உடனடியாக என் நிலத்துக்கு பக்கத்திலுள்ள மின்சார வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்து, அவர்களை உதவிக்கு அழைத்தேன். உடனடியாக அனைவரும் அங்கு வரவே, எங்கள் பணி எளிதானது என கூறினார்.
காவல்துறையினர் விசாரணை
இது குறித்த விசாரணையில் அக்குழந்தை பிறந்து சில நாட்களேயான பெண் குழந்தை என்பது அவர்களுக்கு தெரியவந்திருக்கிறது.
இதையடுத்து, குழந்தையை புதைத்த தாய் மற்றும் குடும்பத்தாரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.