பஹாமாஸ் கொடியுடன் இலங்கையை வந்தடைந்த சொகுசு கப்பல்
Colombo
Sri Lanka
Sri Lankan Peoples
World
By Dhilak
பஹாமாஸ் கொடியுடனான ரிசிலியண்ட் லேடி (Resilient Lady) என்ற சொகுசு கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது.
குறித்த கப்பல் இன்று(13) காலை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது.
மேலும், 278 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பல் 2 ஆயிரத்து 324 பயணிகள் மற்றும் ஆயிரத்து 145 பணியாளர்களுடன் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளது.
கப்பலில் வந்த பயணிகள்
அத்தோடு, கப்பல் குறித்த கப்பல் இன்று மாலை தாய்லாந்து நோக்கி புறப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கப்பலில் வந்த பயணிகள் காலி மற்றும் கொழும்பின் பல பகுதிகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.