பங்களாதேஷ் விமான விபத்து - உயிரிழப்பு 27 ஆக அதிகரிப்பு
பங்களாதேஷ் (Bangladesh) பாடசாலை ஒன்றின் மீது போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27-ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பங்களாதேஷில் (Bangladesh) அந்நாட்டு விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று (21.07.2025)) மதியம் 1:30 மணியளவில் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் முன்னதாக 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு துறை
இந்த நிலையில், பங்களாதேஷ் தீயணைப்பு துறையின் இயக்குநர் ஜெனரல் சாகீத் கமால் இது குறித்து கூறுகையில், “விமானம் நொறுங்கி விழுந்த இடத்தில் 27 உடல்களை மீட்பு படையினர் மீட்டுள்ளனர்.
பலியானவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள், ஆசிரியர்கள் என தெரியவந்துள்ளது.
தீக்காயம் மற்றும் இதர காயங்கள் ஏற்பட்ட 170 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
விமானத்தை இயக்கிய பைலட் முகமது தவ்கீர் இஸ்லாம் இராணுவ வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
