நாவலடியில் மக்கள் போராட்டம் : காவல்துறையினரிடம் நீதி கோரி நடவடிக்கை!

Sri Lanka Police Batticaloa Sri Lanka SL Protest
By Eunice Ruth Jan 29, 2024 03:57 PM GMT
Report

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக மட்டக்களப்பு நாவலடி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் 21 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்த நிலையில், குறித்த மரணம் தொடர்பில் பல சர்ச்சைகள் உருவாகியுள்ளது.

இதன்படி, தனது மகன் கொலை செய்யப்பட்டுள்ளதாக உயிரிழந்த இளைஞனின் தாயார் இன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

நாவலடி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகமும் உருவாகி இருக்கின்றது.

சம்பவம்

இரண்டு கணவருடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த பெண் சுமார் 8 மாத காலமாக உயிரிழந்த நபருடனும் சொந்த கணவரோடும் வாழ்ந்து வந்ததாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.

நாவலடியில் மக்கள் போராட்டம் : காவல்துறையினரிடம் நீதி கோரி நடவடிக்கை! | Batticalo Navalady Protest Murder Deathcontroversy

இலங்கை தமிழரசு கட்சிக்குள் குழப்பம்...!

இலங்கை தமிழரசு கட்சிக்குள் குழப்பம்...!

குறித்து பெண்ணின் நடவடிக்கை கிராம மக்களுக்கு தெரிய வந்ததையடுத்து, நாவலடி கிராம மக்கள் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து குறித்த பெண்ணையும் அவரது சொந்தக் கணவரையும் காத்தான்குடி காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

காவல்துறையில் முறைப்பாடு 

இந்த நிலையில், இன்றைய தினம் (29) நாவலடி கிராமத்தை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் குறித்த பெண்ணின் வீட்டில் தங்களது உடைமைகள் களவாடப்பட்டுள்ளதாக காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். 

நாவலடியில் மக்கள் போராட்டம் : காவல்துறையினரிடம் நீதி கோரி நடவடிக்கை! | Batticalo Navalady Protest Murder Deathcontroversy

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: இலங்கையிலிருந்து பறந்த அவசர கடிதம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: இலங்கையிலிருந்து பறந்த அவசர கடிதம்

இதையடுத்து, இன்று மாலை நாவலடி பொது மக்களால் காத்தான்குடி காவல் நிலைத்தை முற்றுகையிட்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த பெண்ணின் நடவடிக்கை சம்பந்தமாக கிராமத்துக்கு அவபெயர் வரும் என்ற காரணத்தினால் குறித்த பெண்ணையும் கணவரையும் அந்த கிராமத்தில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

பொய்யான முறைப்பாடு 

இதையடுத்து, குறித்த பெண் காவல்துறையில் பொய்யான முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்து அப்பகுதியில் உள்ள இளைஞர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். 

நாவலடியில் மக்கள் போராட்டம் : காவல்துறையினரிடம் நீதி கோரி நடவடிக்கை! | Batticalo Navalady Protest Murder Deathcontroversy

குறிக்கோள் எதுவும் இல்லாத யுத்தம்

குறிக்கோள் எதுவும் இல்லாத யுத்தம்

இதற்கு காவல்துறையினரும் உடந்தையாக இருப்பதாகவும் தங்களது முறைப்பாட்டை கூட பதிவு செய்யவில்லை எனவும் குறிப்பிடுகின்றனர்.

இதனை தொடர்ந்து, குறித்த இடத்திற்கு வருகை தந்த மரணமடைந்த நபரின் தாயார் தனது மகன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தனது மகனுக்கான நீதியான விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மக்கள் எதிர்ப்பு

சுமார் மூன்று மணி நேரங்களுக்கு மேலாக காவல்நிலையத்தில் காத்திருந்த கிராம மக்கள், கிராமம் சார்பாக ஒரு முறைப்பாடு ஒன்றினை எழுதி கையொப்பமிட்டு காத்தான்குடி காவல்துறையினரிடம் கையளித்ததன் பின்னர், அவ்விடத்தை விட்டு கலைந்து சென்றுள்ளனர்.

நாவலடியில் மக்கள் போராட்டம் : காவல்துறையினரிடம் நீதி கோரி நடவடிக்கை! | Batticalo Navalady Protest Murder Deathcontroversy

குறித்த சம்பவம் தொடர்பாக நாளைய தினம் (30) காத்தான்குடி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

எது எவ்வாறாக இருந்தாலும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்டாரா தற்கொலை செய்து கொண்டார என்ற பாரிய சந்தேகங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அகலாத இனவழிப்பின் நினைவுகள்தான் நமது ஆயுதம்…

அகலாத இனவழிப்பின் நினைவுகள்தான் நமது ஆயுதம்…

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021