மட்டக்களப்பு - கொழும்பு இரவு தொடருந்து சேவை மீண்டும் ஆரம்பம்
கடந்த மூன்று மாத காலமாக தடைபட்டிருந்த மட்டக்களப்பு கொழும்புக்கான இரவு தொடருந்து சேவை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
கொழும்பிலிருந்து புறப்பட்ட நேற்று இரவு 7 மணிக்கு தொடருந்து இன்று காலை ஆறு மணி அளவில் மட்டக்களப்பை சென்றடைந்துள்ளது.
கடந்த ஏழு மாததிற்கு முன்பு கிழக்கு மாகாணத்திற்கான தொடருந்து சேவைகள் காட்டு யானைகள் விபத்துக்கு உள்ளாகும் காரணத்தினால் நள்ளிரவு 11 மணிக்கு மாற்றப்பட்டு இடம்பெற்று வந்தது இருப்பினும் இயற்கை அனர்த்தத்தினால் அவை தடை பட்டிருந்தன.
நிகழ்நிலை முன்பதிவு
இந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்ட பொதுமக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவிடம் விடுத்த வேண்டுகோளின் பேரில் போக்குவரத்து அமைச்சரினால் மீண்டும் இரவு சேவை பழைய வழமையான நேரத்திற்கு மாற்றப்பட்டு தற்போது சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாண சுற்றுலா துறையை கட்டி எழுப்பும் வகையில் அரசாங்கத்தினால் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்த தொடருந்து பாதைகள் அனைத்தும் சீர் செய்யப்பட்டு தற்போது அனைத்து சேவைகளும் வழமைக்கு திரும்பியுள்ளன.
இதில் முன்பிருந்ததைப் போல குளிரூட்டப்பட்ட உறங்கல் இருக்கை பெட்டிகளுடன் நிகழ்நிலை ஊடாக முன்பதிவுகளும் மேற்கொள்ள முடியும் என தொடர்ந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |