கிழக்கில் தொடரும் சி.ஐ.டியின் சுற்றிவளைப்பு! நள்ளிரவில் மீட்கப்பட்ட ஆயுதங்கள்
மட்டக்களப்பு நகர் பிரதேசத்தில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் ரி56 ரக துப்பாக்கி ஒன்று மற்றும் ரவைகள், மகசீன் என்பவற்றை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்னர்.
மீட்கப்பட்ட ஆயுதங்களானது, நேற்று(01) இரவு மட்டக்களப்பு தலைமையகத்தில் ஒப்படைக்கப்பட்டதாக பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார தெரிவித்துள்ளார்.
மேலதிக விசாரணை
லயன்ஸ் கிளப் வீதியில் உள்ள காணி ஒன்றில் புதிதாக வீடு கட்டுமானப்பணி இடம்பெற்று வருகின்ற நிலையில் சம்பவ தினமான நேற்று இரவு 10.00 மணியளவில் அங்கு மலசல கூடத்திற்கு குளி அமைப்பதற்கான நிலத்தை தோண்டும் போது புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் துப்பாக்கி இருப்பதை கண்டு விசேட அதிரடிப்படையினருக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற விசேட அதிரடிப்படையினர் ரி56 ரக துப்பாக்கி ஒன்றும் 50 துப்பாக்கி ரவைகள், 2 மகசீன்களை மீட்டனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா
