சீட்டிழுப்பில் ரூ.6700 கோடி வென்ற பிரித்தானியர்! ஒரே இரவில் மூன்றாவது மிகப்பெரிய வெற்றியாளர்
அதிர்ஸ்டம்
பிரித்தானியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் யூரோ மில்லியன்ஸ் அதிர்ஸ்ட சீட்டில் 171 மில்லியன் பவுண்டுஸ் வென்றுள்ளார்.
இந்த புதிய பிரித்தானிய வெற்றியாளர் இதுவரை வெற்றி பெற்றோரில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.
பிரித்தானியாவில் இதுவரை 16 பேர் மட்டுமே £100 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள பணத்தை வென்றுள்ளனர்,
அவர்களில் இப்போது இவரும் உள்ளடங்குகின்றார் என தெரிவிக்கப்படுகின்றது.
171,815,297.80 பவுண்டுகள் அதிர்ஸ்டம்
அவர் வெற்றிபெற்ற தொகை சரியாக 171,815,297.80 பவுண்டுகள் ஆகும்.
இதன் இலங்கை ரூபாயின் மதிப்பு சுமார் 6700 கோடிகள் ஆகும்.
யூரோ மில்லியன்ஸ் ( Euro Millions ) பரிசுத் தொகையை வென்ற எண்கள்: 14, 15, 22, 35, 48 மற்றும் அதிர்ஷ்ட நட்சத்திரங்கள்: 03, 08 ஆகும்.
இந்த வெற்றியாளர் இதுவரை வென்ற பிரித்தானியர்களில் மூன்றாவது பெரிய வெற்றியாளராகவும், இந்த ஆண்டு மட்டும் ஆறாவது பிரித்தானிய யூரோ மில்லியன்ஸ் ( Euro Millions ) வெற்றியாளராகவும் மாறியுள்ளார்.
195 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகள்
இருப்பதிலேயே அதிகமாக கடந்த ஜூலை 19-ஆம் திகதி ஒரு பிரித்தானியர் 195 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகளை வென்று முதலிடத்தில் இருக்கிறார்.
அனால் அவர் யார் எங்கு வாழ்கிறார் என்பது வெளியிடப்படவே இல்லை.
இரண்டாவது இடத்தில், 184 மில்லியன் பவுண்டுகளுடன் க்ளௌசெஸ்டர்ஷைர் ஜோடியான ஜோ மற்றும் ஜெஸ் இருக்கின்றனர்.
இவர்கள் கடந்த மே 10-ஆம் திகதி இந்த லொட்டரியை வென்றனர்.
இப்போது, இந்த புதிய பிரித்தானிய வெற்றியாளர் 171 மில்லியன் பவுண்டுகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.