கடலுக்கு நீராட சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த கதி : நால்வர் பலி
நீர்கொழும்பில் (Negombo) கடலில் நீராட சென்ற நான்கு இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (13) நீர்கொழும்பு வென்னப்புவ பகுதியில் இடம்பெற்றுள்ளதாக வென்னப்புவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த நான்கு இளைஞர்களும் ஒன்றாக இனைந்து கடலில் நீராடி கொண்டிருந்த போது கடல் அலையில் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.
கடலில் நீராடி
அதனை தொடர்ந்து வென்னப்புவ காவல்துறையினர் மற்றும் கடற்படையினர் ஆகியோரின் உதவியோடு சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர்களில் மூவர் பொகவந்தலாவ சென் விஜயன்ஸ் தோட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் மற்றுமொரு நபர் கொழும்பு பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(உதயகுமார் ஸ்ரீதரன் வயது 17), (ஸ்ரீகாந்த் சரன்ராஜ் வயது 19), (ஸ்ரீகாந்த் அஜித்குமார் வயது 18) மற்றும் (யூசுப் வயது 27) ஆகியோரே இவ்வாறு சடலாமாக மீட்கப்பட்டுள்ளனர்.
பிரேத பரிசோதனை
சடலமாக மீட்கப்பட்டவர்களுள் ஸ்ரீகாந்த் சரன்ராஜ் மற்றும் ஸ்ரீகாந்த் அஜித்குமார் ஆகியோர் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் எனவும் உதயகுமார் ஸ்ரீதரன் அவர்களுடைய உறவினர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட நான்கு சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக வென்னப்புவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபடவுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை வென்னப்புவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
