நீராட சென்ற சிறுமியை இழுத்துச் சென்ற முதலை!
அனுராதபுரம் - மரடன்கடவலவில் ஆற்றில் நீராட சென்ற சிறுமி ஒருவரை முதலை இழுத்து சென்ற நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மரடன்கடவலவில் உள்ள ஹினுக்கிரியாவ ஏரியில் நீந்தச் சென்ற சிறுமியை நேற்று பிற்பகல் (19) முதலை ஒன்று கவ்வி இழுத்துச் சென்று கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் கணேவல்பொல பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி என காவல்துறையினர் குறிப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதி
தன் பாட்டியுடன் மேற்கூறிய ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது இந்த விபத்தை எதிர்கொண்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கிராம மக்கள், காவல்துறையினர் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் சிறுமியைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் முதலையால் இழுத்துச்செல்லப்பட்ட சிறுமியை அடையாளம் கண்ட அதிகாரிகள் அவரை மரடன்கடவலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது சிறுமி உயிரிழந்தமை கண்டறியப்பட்டதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
you may like this