தைப்பொங்கல் தினத்தில் யாழில் இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்
police
jaffna
death
chankanai
young family man
By Sumithiran
யாழ்ப்பாணத்தில் தனியார் பேருந்து உரிமையாளர் ஒருவர் மூன்று நாள்களாகக் காணாமற்போன நிலையில் சங்கானை மண்டிகைக் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மாதகலைச் சேர்ந்த கடம்பன் (வயது-38) என்பவரே இவ்வாறு சடலமாக மீடகப்பட்டவராவார். உள்ளூர் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து உரிமையாளரான அவர் மூன்று நாள்களாக காணாமற்போயிருந்தார் என்று இளவாலை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அவரது சடலம் இன்று பிற்பகல் சங்கானை மண்டிகைக்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 3 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்