காசாவில் மற்றுமொரு பணயக் கைதியின் உடலை மீட்டது இஸ்ரேல் படை
2023 ஒக்டோபரில் ஹமாஸ் தலைமையிலான தாக்குதலின் போது பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட தாய்லாந்து நாட்டவரின் உடலை இஸ்ரேல் மீட்டெடுத்ததாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
தெற்கு காசாவின் ரஃபா பகுதியில் வெள்ளிக்கிழமை ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது நட்டாபோங் பிந்தாவின் உடல் மீட்கப்பட்டதாக அவர் கூறினார். 35 வயதான அவர் கடத்தப்பட்டபோது தெற்கு இஸ்ரேலில் விவசாயத் தொழிலாளியாக வேலை செய்து கொண்டிருந்தார்.
இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட தகவல்
நட்டாபோங் சிறைபிடிக்கப்பட்ட முதல் மாதங்களில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று இஸ்ரேலிய இராணுவ அதிகாரி ஒருவர் கூறினார். நடவடிக்கைக்கு முன்பு, அவர் இறந்துவிட்டாரா அல்லது உயிருடன் இருக்கிறாரா என்பது தெரியவில்லை.
இந்த வார தொடக்கத்தில் காசாவில் இரண்டு இஸ்ரேலிய அமெரிக்கர்களின் உடல்களை இஸ்ரேலிய இராணுவம் மீட்டெடுத்த பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது.
பயங்கரவாதியிடம் நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து மீட்கப்பட்ட உடல்
"பிடிக்கப்பட்ட பயங்கரவாதி" ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலைத் தொடர்ந்து அவரது உடலை மீட்கும் பணி தொடங்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் ஒரு அறிக்கையில் தெரிவித்தன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
