கிணற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தள்ளனர்.
மாவத்தகம - பரகஹதெனிய பகுதியில் குறித்த ஆணின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் மாவத்தகம, வேவுட பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
மாவத்தகம காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அப்பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் அமைந்துள்ள, பயன்படுத்தப்படாத பாழடைந்த கிணறு ஒன்றிற்குள் இருந்தே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலம் மீதான நீதவான் விசாரணைக்காக சம்பவ இடத்தில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மாவத்தகம காவல்துறையினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |