யாழ். கடற்கரையில் கரையொதுங்கிய அடையாளம் தெரியாத சடலம்!
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Death
By Thulsi
யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கரையொதுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சடலமானது காரைநகர் - வேரப்பிட்டி பகுதியில் இன்று (24) காலை கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடற்கரைக்கு சென்றவர்கள் சடலம் ஒன்று மிதப்பதை அவதானித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
மேலதிக விசாரணை
சடலம் யாருடையது என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் சடலம் எவ்வாறு கடலில் அடித்துவரப்பட்டது என்பது தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்கள் - த. பிரதீபன்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி