புத்தகங்களுக்கான வற் வரியினால் ஏற்பட்டுள்ள நிலைமை
Sri Lanka
Sri Lankan Peoples
Value Added Tax (VAT)
By Dilakshan
புத்தகங்களுக்கு வற் வரி விதிக்கப்பட்டதன் காரணமாக புத்தக விற்பனை சுமார் 30% குறைந்துள்ளதாக இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது சங்கத்தின் செயலாளர் தினேஷ் குலதுங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக புதிய புத்தகங்கள் வெளியிடுவது குறைந்துள்ளதாகவும், சில அச்சகங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோரிக்கை
அத்தோடு, நல்ல விற்பனையான புத்தகங்களை மறுபதிப்பு செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தினேஷ் குலதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்காரணமாக 2024 ஜனவரிக்கு முன்பு இருந்ததைப் போல புத்தகத் துறைக்கு வற் வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று புத்தகப் பதிப்பாளர்கள் சங்கம் உள்ளிட்டோர் கோரிக்கை வைப்பதாகக் கேட்டுக் கொண்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்