யாழில் ஆசிரியர் தண்டித்ததால் மாணவன் எடுத்த விபரீத முடிவு
யாழில் (Jaffna) ஆசிரியர் தண்டித்ததால் மாணவன் ஒருவர் கிருமி நாசினியை அருந்தியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் - புத்தூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், புத்தூர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் குறித்த மாணவனை தன்னிடம் அனுமதி பெறாமல் விளையாட்டு நிகழ்வு ஒன்றுக்காக சென்றமையால் ஆசிரியர் தண்டித்துள்ளார்.
விவசாய தேவை
அதன் பின் வீடு சென்ற மாணவன் விவசாய தேவைக்காக வீட்டில் வைத்திருந்த கிருமி நாசினியை அருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தண்டனை வழங்கிய குறித்த ஆசிரியர் ஏற்கனவே தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவனுக்கு தடியால் தாக்கிய குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் பாடசாலை அதிபருடன் தொடர்பு கொண்ட போது தான் விடுமுறையில் நிற்பதாகவும் பாடசாலை ஆசிரியர் மாணவனைப் பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.
பின்னர் வீடு சென்ற மாணவன் மருந்து அருந்தியதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
