ஆறு வயது சிறுவன் கழுத்து அறுக்கப்பட்டு கொலை! கொலையாளிகளின் பதற வைக்கும் வாக்குமூலம்
கொலை
டெல்லியின் லோதி காலனி பகுதியில் ஆறு வயது சிறுவன் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சிறுவனின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், கட்டிட வேலை பார்க்கும் இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
ஆறு வயது சிறுவன் நரபலி
அப்போது அந்த இளைஞர்கள் கூறிய விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பணக்காரனாக வாழ வேண்டும் என்றால் சிறுவனை நரபலி கொடுக்க வேண்டும் என கடவுள் கூறியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதனாலேயே ஆறு வயது சிறுவனை கொலை செய்ததாக குறித்த இளைஞர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த அமீர்குமார், விஜயகுமார் என தெரிய வந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட சிறுவனின் தாய் கதறி அழுதது காண்போரை கலங்க வைத்துள்ளது.