வருட இறுதியில் ஓய்வு பெறப்போகும் பிரபல வீரர்: ரசிகர்கள் அதிர்ச்சி
பிரேசில் நாட்டிற்காக அதிக கோல்கள் (மொத்தம் 79) அடித்த வீரராக இருக்கும் நெய்மர், இந்த ஆண்டு இறுதியில் கால்பந்தில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளமை அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
காயம் காரணமாக பல போட்டிகளைத் தவறவிட்ட நெய்மர், தற்போது தனது சிறு வயது அணியான சந்தோஷ் கிளப்பில் விளையாடி வருகிறார். பார்சிலோனா, பிஎஸ்ஜி அணிகளுக்காக விளையாடியுள்ளார் நெய்மர்.
இன்னும் உடல் தகுதி பெறவில்லை
இந்த ஆண்டு கால்பந்து உலகக் கோப்பையில் பங்கேற்க நெய்மர் இன்னும் உடல் தகுதி பெறவில்லை என பிரேசில் அணி பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நெய்மர் அளித்த பேட்டியில் கூறியதாவது,
இப்போது என்னாகும் என்று தெரியவில்லை. அடுத்த ஆண்டு குறித்தும் தெரியாது. அநேகமாக டிசம்பர் வந்ததுடன் நான் ஓய்வு பெறுவேன் என நினைக்கிறேன்.
இந்த ஆண்டு மிக முக்கியமானது
ஆண்டின் இறுதியில் என் மனது என்ன நினைக்கிறதோ அப்படித்தான் நடக்கும். இந்த ஆண்டு மிக முக்கியமானது. சந்தோஷ் கிளப்பிற்கு மட்டுமல்ல, பிரேசில் தேசிய அணிக்கும். உலகக் கோப்பை நடைபெறும் ஆண்டு என்பதால் எனக்கும் முக்கியமானது. இந்த சீசனில் 100 சதவீதம் விளையாட விரும்புகிறேன் என தெரிவித்தார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |