சாமர எம்.பிக்கு வலுக்கும் நெருக்கடி : உயர் நீதிமன்றின் உத்தரவு
Supreme Court of Sri Lanka
Uva Province
MP Chamara Sampath Dassanayake
By Sumithiran
நாடாளுமன்ற உறுப்பினர் சாமரா சம்பத் தசநாயக்க மீது ஊழல் குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கை ஏப்ரல் 30 அன்று விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (24) கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்னவின் முன் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.
மாகாணசபை காசோலை தனிப்பட்ட கணக்கில் வரவு வைப்பு
சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்ட நீதிபதி, முன் விசாரணை கலந்தாய்விற்காக ஏப்ரல் 30 அன்று வழக்கை விசாரணைக்கு அழைக்குமாறு உத்தரவிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சம்பத் தசநாயக்க, 2016-ஆம் ஆண்டில் ஊவா மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தபோது, மாகாண சபை சார்பாக வரையப்பட்ட காசோலையைத் தனது தனிப்பட்ட கணக்கில் வைப்பு செய்ததன் மூலம் ஊழல் குற்றத்தைச் செய்ததாகக் குற்றம் சாட்டி இந்த வழக்கு அவர் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்