பிரித்தானியாவின் நிலைப்பாடு குறித்து அடைக்கலநாதன் எம்.பி கருத்து
பிரித்தானியாவின் நிலைப்பாடு சர்வதேச நீதிமன்றம் வரை செல்ல வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) தெரிவித்துள்ளார்.
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று (30.03.2025) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையர்கள் நால்வருக்கு பிரித்தானியா விதித்துள்ள தடை வரவேற்கத்தக்கது.
பிரித்தானியாவின் தடை
தற்போதைய அரசாங்கம் உட்பட தென்னிலங்கை கட்சிகள், குறித்த நால்வருக்கும் ஆதரவு வழங்குவது விநோதமாக உள்ளது.
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுக்கும் என்று கூறுகின்ற நிலையில், தமிழ் மக்கள் அனைவரும் அதனை ஆதரிக்க வேண்டும்.” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், முன்னாள் இலங்கை இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கர்ணகொட, முன்னாள் இராணுவ தளபதி ஜகத் ஜயசூரிய மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) ஆகியோர் மீது பிரித்தானியா கடந்த 24 மார்ச் 2025 அன்று தடை விதித்திருத்தமை குறிப்பிடத்தக்குது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 1 வாரம் முன்
