தேனிலவுக்கு உலங்கு வானூர்தியில் சென்ற பிரிட்டன் இளம் தம்பதிக்கு நேர்ந்த துயரம்
கிரேக்க தீவான சிஃப்னோஸில் திங்களன்று நடந்த உலங்கு வானூர்தி விபத்தில், ஒரு இளம் பிரிட்டிஷ் தம்பதியினரும் அவர்களது விமானியும் உயிரிழந்ததாக கிரேக்க காவல்துறை தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்கள் அலெக்சாண்டர் குரோமி மற்றும் மேரி எபர்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்தத் தம்பதியினர் தேனிலவுக்கு சென்றிருந்ததாக கதிமெரினி செய்தித்தாள் கூறியுள்ளது.
தரையிறங்கும் தளத்திலிருந்து சில மீட்டர் தொலைவில் விபத்து
அந்தத் தனியார் உலங்கு வானூர்தி, தரையிறங்கும் தளத்திலிருந்து சில மீட்டர்கள் தொலைவில் விபத்துக்குள்ளானதில், அந்தத் தம்பதியினரும், கிரேக்க நாட்டவரான அவர்களது விமானியும் உயிரிழந்தனர்.

ஏதென்ஸுக்கு அருகிலுள்ள மார்கோபோலோ கிராமத்திலிருந்து அந்தப் பிரபலமான விடுமுறை தீவுக்கு அந்தத் தம்பதியினர் உலங்கு வானூர்தியில் சென்றதாகக் கூறப்படுகிறது என கதிமெரினி செய்தி வெளியிட்டுள்ளது.
விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை
விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |