பிரித்தானிய இராஜ குடும்பத்திற்கு மற்றுமோர் துயரம் - மகாராணிக்கு நெருக்கமானவர் உயிரிழப்பு!
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் முடிசூட்டு விழாவில், அவருக்கு உதவிய 6 பெண்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் பிரித்தானிய மறைந்த ராணியாருக்கு மிகவும் நெருக்கமான பணியாளர்களில் ஒருவர் என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர், லேடி மேரி ரஸ்ஸல் எனவும், இவர் மரணமடைந்துள்ள தகவல், பிரித்தானிய ராஜகுடும்பத்து உறுப்பினர்களை மிகவும் கவலை கொள்ள செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மகாராணியின் இறுதி சடங்கிற்கு முதல் நாள் உயிரிழப்பு
இவர் ராணியாரின் இறுதி அஞ்சலி முன்னெடுக்கப்படுவதற்கு முதல் நாள் அவரது குடியிருப்பிலேயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
88 வயதான லேடி மேரி ரஸ்ஸல் ஏர்ல் ஹாடிங்டன் என்பவரின் மகள் எனவும், ராணியார் இரண்டாம் எலிசபெத் முடிசூட்டு விழாவில், அவருக்கு உதவிய 6 பெண்களில் ஒருவர் எனவும் கூறுகின்றனர்.
முடிசூட்டு விழாவில் ராணியாரின் 21 அடி நீளமான உடையை சுமந்து செல்லும் பணியில், 6 பெண்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயம் வழியாக கேன்டர்பரி பேராயர், பின்னர் ஜெஃப்ரி ஃபிஷரை நோக்கி இந்த பயணம் நீண்டுள்ளது.
ராணியின் சிறப்பு உடையை சுமந்து சென்ற பெண்
ஆனால், ராணியாரின் அந்த சிறப்பு உடையை சுமந்து செல்ல கிடைத்த வாய்ப்பு வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் என லேடி மேரி ரஸ்ஸல் பின்னர் குறிப்பிட்டிருந்தார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த 6 பேர்களில் தற்போது இரண்டாவது நபராக தனது 88வது வயதில் லேடி மேரி ரஸ்ஸல் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், 2020ல் லேடி மொய்ரா காம்ப்பெல் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார்.
தற்போது உயிருடன் இருப்பவர்கள், டோவேஜர் பரோனஸ் க்ளென்கோனர், லேடி ஜேன் லேசி, பரோனஸ் வில்லோபி டி எரெஸ்பி மற்றும் லேடி ரோஸ்மேரி முயர் ஆகிய நால்வருமே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.