வடக்கு கிழக்கில் விகாரைகள் மீது கை வைப்போரின் தலை எடுக்கப்படுமாம் - பகிரங்க எச்சரிக்கை

Mervyn Silva Eastern Province Northern Province of Sri Lanka Buddhism
By Vanan Aug 13, 2023 02:00 PM GMT
Report

வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள விகாரைகளில் கை வைப்போரின் தலையை எடுப்பேன் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா எச்சரித்துள்ளமை தமிழ் தரப்பினரின் கடுமையான கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

மேர்வின் சில்வாவின் இந்த உரையானது, இனங்களுக்கு இடையில் பதற்றத்தை தோற்றுவிக்கும் வகையில் அமைந்துள்ள விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை அரசியலில் சர்ச்சைக்குரிய அரசியல் வாதியாகவே வலம் வரும் மேர்வின் சில்வா, ஊடக நிறுவனத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியமை, அரச ஊழியரை மரத்தில் கட்டிவைத்து தாக்கியமை, முன்னேஸ்வரம் ஆலயத்துக்குள் புகுந்து வேள்வி பூஜையை தடுத்து நிறுத்தியமை என போன்ற அடவாடிகளில் ஈடுபட்ட ஒருவராக பலராலும் அறியப்படுகின்றார்.

பகிரங்க எச்சரிக்கை

வடக்கு கிழக்கில் விகாரைகள் மீது கை வைப்போரின் தலை எடுக்கப்படுமாம் - பகிரங்க எச்சரிக்கை | Buddhism Sri Lanka Tamils Area Creating Tension

ராஜபக்சக்களின் சகாவாக அவர்களின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மேர்வின் சில்வா, 2015 அதிபர் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்த பின்னர் பொதுத்தேர்தலில் போட்டியிட எந்தவொரு கட்சியும் இடமளிக்காத நிலையில், அரசியல் ரீதியில் ஓரங்கட்டப்பட்டார்.

இந்த பின்னணியில் களனியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய மேர்வின் சில்வா, வடக்கு கிழக்கிலுள்ள மக்களுக்கு பகிரங்க எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இதன்போது மேலும் உரையாற்றிய அவர், “யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள், எமக்கு இந்தப் பகுதி வேண்டும் எனக் கூறுகின்றனர். கிழக்கில் உள்ளவர்கள் எமக்கு இந்தப் பகுதி வேண்டும் எனக் கூறுகின்றனர்.தெற்கிலுள்ளவர்கள் எமக்கு இந்தப் பகுதி வேண்டும் என கூறுகின்றனர்.

இங்கு பகுதி பகுதியாக ஒன்றும் இல்லை. இது எமது தாய்நாடு. அதற்கான உறுதிப்பத்திரம் எம்மிடமே உள்ளது. நீங்கள் விரும்பினால் எங்களுடன் சமாதானமாக நல்லிணக்கத்துடன் வாழ முடியும்.

தலையை எடுத்துக்கொண்டுதான் வருவேன்

வடக்கு கிழக்கில் விகாரைகள் மீது கை வைப்போரின் தலை எடுக்கப்படுமாம் - பகிரங்க எச்சரிக்கை | Buddhism Sri Lanka Tamils Area Creating Tension

வடக்கிலுள்ள தமிழ் கட்சிகளின் தலைவர்களுக்கு நான் ஒன்றைக் கூறுகின்றேன். பிரபாகரனின் பகையை வைத்துக்கொள்ள வேண்டாம்.

அதிபருக்கு நான் மிகவும் மரியாதையுடன் ஒன்றைக் கூறுகின்றேன். இந்த நாட்டிலுள்ள வளங்களை புலம்பெயர்ந்தவர்களுக்கு விற்பனை செய்ய முயற்சித்தால், வீதிக்கு இறங்குகள் என களனி மக்களுக்கு கூறுகின்றேன்.

இந்தக் கூட்டத்தின் பின்னர் நான் வடக்கு கிழக்கிற்கு வருவேன். நீங்கள் விகாரைகள் மீது கை வைக்க வந்தால், நீங்கள் மகாநாயக்கர்கள் மீது கை வைக்க வந்தால், நான் வெறுமனே களனிக்கு வர மாட்டேன்.

உங்களின் தலையை எடுத்துக்கொண்டுதான், களனிக்கு மீண்டும் வருவேன். எனக்கு பணியாற்றுவதற்கு அமைச்சுப் பதவிகள் தேவையில்லை” - என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025