திருகோணமலை - திரியாய் மக்களின் காணி விவகாரம்

Trincomalee Sri Lanka Sri Lanka Police Investigation
By Harrish Oct 10, 2024 09:25 PM GMT
Report

திருகோணமலை(Trincomalee) - குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட திரியாய் மக்களின் காணி விவகாரம் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை குச்சவெளி பிரதேச செயலகத்துக்கு அனைத்து விவசாயிகளையும் உரிய ஆவணங்களுடன் வருகை தருமாறு புல்மோட்டை காவல்துறை உயர் அதிகாரி பணித்ததாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம்(10) குச்சவெளி கமநல சேவைத் திணைக்கள அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் 2024ஆம் ஆண்டுக்கான பெரும்போக வயற் செய்கைக்காக மக்கள் தங்கள் காணிகள் அளவீடு செய்யச் சென்ற வேளை குறித்த காணிகளில் அளவீடு செய்ய விடாது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த புல்மோட்டை காவல்துறை உயர் அதிகாரி மேற்படி தெரிவித்துள்ளார்.

1.5 மில்லியன் டொலர் பெறுமதியான வாகனங்களை கொள்ளையிட்ட மூவர் கைது: கனடாவில் சம்பவம்

1.5 மில்லியன் டொலர் பெறுமதியான வாகனங்களை கொள்ளையிட்ட மூவர் கைது: கனடாவில் சம்பவம்

மக்களின் காணிகள்

திருகோணமலை திரியாய் மக்களின் பூர்விக வயல் நிலங்களில் ஒன்றான வளத்தாமலையடி, ஆதிக்காடு, வேடன் குளம், போன்ற 880 ஏக்கர் விஸ்தீரனமுடைய 125 வருடப் பழமை வாய்ந்த ஆங்கிலேயர் காலத்து உறுதி உடைய காணிகள் ஆகும்.

1985 ஆம் ஆண்டு வரை அந்நிலங்களில் வயற்செய்கை மேற்கொண்டு வந்த நிலையில் 1985ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் போது மக்கள் பல்வேறு மாவட்டங்களிற்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

திருகோணமலை - திரியாய் மக்களின் காணி விவகாரம் | Buddhist Monk Cultivates People S Lands Trinco

இதனைதொடர்ந்து 1990ஆம் ஆண்டு மீண்டும் மக்கள் வந்து இக்காணிகளில் மானாவாரி நெற் செய்கையை செய்துள்ளனர்.

இதன்போது, ஏற்பட்ட இனக்கலவரத்தினைத்தொடர்ந்து 2002ஆம் ஆண்டு மீண்டும் தமது சொந்த நிலங்களுக்கு மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

பிக்குவின் அச்சுறுத்தல்

இருந்த போதும் போரினால் வாழ்வாதாரங்களை இழந்த விவசாயிகள் 2020ஆம் ஆண்டு மீண்டும் தமது வயல் நிலங்களில் வயற்செய்கை மேற்கொள்ளச் சென்ற வேளை புல்மோட்டை அரிசி மலைப் பிக்குவினால் மக்களின் அனைத்துக்காணிக்காணிகளும் அடாவடியான முறையில் காணிகள் கையகப்படுத்தப்பட்டு விவசாயிகளுக்கு கடுமையான அச்சுறுத்தல்களையும் மேற்கொண்டு வந்துள்ளார்.

2022ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் மக்களின் காணிகளை மக்களிடம் கையகப்படுத்த உத்தரவு பிறபித்த போதும் தொடர்ந்தும் அடாவடியான முறையில் பிக்கு செயற்பட்டு வந்த நிலையில் கடந்த 05.09.2024ஆம் திகதி விவசாய நடவக்கையில் ஏற்பட்ட விவசாயிகளை தடுத்து நிறுத்தி மீண்டும் பிக்கு தனது அடாவடியை தொடர்ந்துள்ளார்.

திருகோணமலை - திரியாய் மக்களின் காணி விவகாரம் | Buddhist Monk Cultivates People S Lands Trinco

இதையடுத்து, உடனடியாக இப்பிணக்கு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரிடம் தெரியப்படுத்தப்பட்டு கடந்த 07.09.2024 ஆம் திகதி மாலை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பிக்கு உற்பட காணி உரிமையாளர்கள் அனைவரையும் அழைத்து முழுமையான விசாரணைக்குப் பிறகு உரிய ஆவணங்கள் உள்ள விவசாயிகள் உடனடியாக வயற்செய்கையில் ஈடுபடுமாறு அனுமதி வழங்கியுள்ளார். 

கனடாவில் மகனால் தந்தைக்கு நேர்ந்த கொடூரம்

கனடாவில் மகனால் தந்தைக்கு நேர்ந்த கொடூரம்

புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மீண்டும் தரையிறக்கப்பட்ட சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானம்

புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மீண்டும் தரையிறக்கப்பட்ட சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
GalleryGalleryGallery
ReeCha
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025